மெக்சிகோவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திற்கு அருகிலுள்ள வளைகுடா கடற்கரையில் ஒரு நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தின் போது மேற்கூரை இடிந்து விழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு 49 பேரை பத்திரமாக வெளியேற்றினர்.
மேலும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் புதையுண்டிருக்க வாய்ப்புள்ளது, இது போன்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.இடிபாடுகளில் சிக்கியவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.