இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக சார்பில் போராட்டம்-வைகோ

“இந்திய அரசு தனது வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஆதரவு வழங்கக் கூடாது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக…

“இந்திய அரசு தனது வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஆதரவு வழங்கக் கூடாது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா துரையின் 114 வது பிறந்தநாள் விழா சென்னை அண்ணா கலையரங்கத்தில் மதிமுக சார்பில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழர்களை ஏமாற்ற பிரதமர் மோடி திருக்குறளையும் புறநானூற்றையும் புகழ்கிறார்.
இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம் என  உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். அமித் ஷா அவர்களே உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது. இந்தியை எதிர்த்து நாங்கள் ரத்தம் சிந்தியிருக்கிறோம். அந்த ரத்தம் வீண் போகாது. இந்த மண்ணில் இந்தியை உங்களால் திணிக்க முடியாது. திணக்க முடிந்தால், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக சார்பில் போராட்டம்
நடத்தப்படும். 750 பக்கங்கள் கொண்ட இந்து சாம்ராஜ்ய கொள்கை வெளிவந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

நம் பிரதமர் சாமர்த்தியமானவர், கெட்டிகாரர் தமிழர்களுக்கு திருக்குறள்,
புறநானூறு பிடிக்கும் என்பதால், திருக்குறளையும் புறநானூறு பாராட்டுகிறார். இதை அவர் உள்ளத்தில் இருந்து வந்த உண்மையா? இல்லை தமிழர்களை ஏமாற்றுவதற்காகவா?

ராணுவத்திற்கு அதிக செலவு செய்ததால் தான் இலங்கை பொருளாதார சிக்கலில் உள்ளது
என மனித உரிமை சங்கம் கூறியுள்ளது. எனவே ராணுவ செலவை குறைத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல தமிழக பகுதிகளில் உள்ள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உணவு மருந்து கொடுங்கள். நான் வேண்டாம் என சொல்லவில்லை, ஆனால்
ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எந்த நாடாவது உணவு மருந்து
கொடுத்தார்களா?

இலங்கையில் உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிங்கள ராணுவம் திரும்ப பெற
வேண்டும் மற்றும் பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். விடுதலை போர் நடத்தியதில் பிரபாகரனை போல் ஒரு வீரன் கிடையாது என்பது என் அபிப்பிராயம்.

இந்திய அரசு தனது வெளிநாட்டு கொள்கையை மாற்றி கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது. சிங்கள அரசு தமிழர்களை கொலை செய்த அரசு என்றார் வைகோ.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.