மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் சிறப்பு வழிபாடு!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் ஆடி பாடியபடி ஊர்வலம் சென்று சுமதிநாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தின் 24…

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் ஆடி
பாடியபடி ஊர்வலம் சென்று சுமதிநாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரர் ஆன மகாவீர்
ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால்
கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜெயின் சங்கத்திலிருந்து அலங்கரித்து
வைக்கப்பட்டிருந்த தீர்த்தங்கரர் உற்சவ மூர்த்தியை முக்கிய வீதிகள் வழியாக
ஆண்கள் பெண்கள் ஊர்வலமாக ஆடிப்பாடி எடுத்துச் சென்றனர்.

மகாதான வீதி, கச்சேரி சாலை வழியாக ஜெயின் ஆலயமான சுமதி நாத் ஆலயத்தை ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு பால் தீர்த்தம் தெளித்து சுமதிநாத் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு செய்யப்பட்டது. 

—–ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.