முக்கியச் செய்திகள்

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் போக்சோவில் கைது

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரியை அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர் விஜய் (21). அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்
குளிக்கும்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பின்னர்,
அந்த வீடியோவை அந்தப் பெண்ணின் அண்ணன் செல்போனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், அப்பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து இந்த வீடியோவை தனக்கு யாரோ அனுப்பி வைத்ததாகவும், அதனை ஃபார்வேர்ட் செய்ததாகவும் கூறியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண்ணின் அண்ணன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜய்யை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் விஜய் தான் அந்தப் பெண் குளிக்கும்போது அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் விஜயை கைது செய்து,  அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram