தாங்க முடியாத சோகம்: மனைவியின் சிதையில் விழுந்து கணவன் உயிரிழப்பு

மனைவி உயிரிழந்த சோகத்தில், அவர் சிதையில் விழுந்த கணவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர் (60). இவர் மனைவி ராய்பதி சாபர்…

மனைவி உயிரிழந்த சோகத்தில், அவர் சிதையில் விழுந்த கணவர் உடல் கருகி உயிரிழந்தார்.

ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர் (60). இவர் மனைவி ராய்பதி சாபர் (57). இவர்களுக்கு 4 மகன்கள். இந்நிலை யில் ராய்பதி சாபர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதை நிலமணியால் தாங்க முடியவில்லை. சோகமாகவே காணப்பட்டார்.

இந்நிலையில் ராய்பதிக்கு நேற்று இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது ஏங்கி ஏங்கி அழுதபடியே இருந்தார், நிலமணி. சிதைக்கு தீ மூட்டியபின் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிதையை நோக்கி ஓடிய நிலமணி, அதில் திடீரென குதித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், அவரை மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உடல் முழுவதும் தீபிடித்தது. இதனால் அவரும் உயிரிழந்தார்.

மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் கணவர் உயிர்விட்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவின் பவானிபட்னா மாவட்டம் கோலமுண்டா பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாமணி சபர், 65. இவரது மனைவி ராய்பாரி, 60, இறந்ததால் நேற்று இறுதிச்சடங்குகள் நடந்தன.அவரது உடலுக்கு தீயூட்டிய பின், மகன்கள் மற்றும் உறவினர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது மனைவி இறந்த சோகம் தாளாத நிலாமணி, எரிந்த சிதையில் பாய்ந்ததால் உடல் கருகி பலியானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.