கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்யாத தகுதியான விண்ணப்பதாரர்கள் தற்போது நடைபெறும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் தாக்கல் செய்யலாம் தமிழ்நாடு அறிவித்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாராகள் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், விண்ணப்பதாரர்கள் மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்யாத தகுதியான விண்ணப்பதாரர்கள் தற்போது நடைபெறும் முகாம்களில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.