பாலமேட்டில் கோலகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு…. 18 காளைகளை அடக்கி கெத்து காட்டிய வீரர்!

பாலமேட்டில் நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கிய வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது. தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு, மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில்…

பாலமேட்டில் நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கிய வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது.

தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு, மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியை கொடியசைத்து, தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. 8 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 674 காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் கருப்பாயூரணி கார்த்திக் என்பவர், 18 மாடுகளை பிடித்து முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கபபட்டது.

இப்போட்டியில் 17 காளைகளை பிடித்த மாடுபிடி வீரரான பிரபாகரன் 2 ஆம் இடம் பிடித்தார். பிடிபடாமல் நின்று விளையாடிய பாலமேடு யாதவர் உறவின்முறையைச் சேர்ந்த காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டின் போது 12 மாடுபிடி வீரர்கள், 7 உரிமையாளர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply