மாவீரன் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரம் ஆன நிலையிலும் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்து வருகிறது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சரிதா, அதிதி சங்கர், யோகி பாபு, சுனில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்தப் படம் தமிழில் மாவீரன் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹாவீரடு என்ற பெயரிலும் வெளியானது.
பத்திரிகையில் கார்டூன் வரையும் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். எந்த ஒரு பிரச்னைக்கும் செல்லாமல் அமைதியாக வாழ விரும்பும் சத்யா தனக்கு மட்டும் கேட்கும் ஒரு மனக்குரலின் பிடியில் மாட்டிகொண்டு வெளிவருவதே படத்தின் கதை.
Big thanks and Gratitude to SK fans,cinema audience and press & media for making #Maaveeran /#Mahaveerudu a BLOCKBUSTER 💥😇🙏❤️#BlockbusterMaveeran #BlockbusterMahaveerudu
🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl / @RaviTeja_offl
🎬 @madonneashwin #VeerameJeyam… pic.twitter.com/IRdO8jkNQF— Shanthi Talkies (@ShanthiTalkies) July 18, 2023
படத்தை பார்த்த பல ரசிகர்கள் படம் முழுக்க சிரிப்பு வெடிகளாக உள்ளதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படத்தை பார்த்த உணர்வு இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை என்றும் இரண்டாம் பாதி சற்றே நீளமாக இருப்பதாகவும் கூறினர்.
சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இதனால் விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுக்க தொடங்கினர். முதல்நாள் வசூலாக ரூ10.2 கோடி எனக் கூறப்பட்டது. திரைப்படம் வெளியாகி 4 வது நாளான இன்று மாவீரன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலித்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
How @Siva_Kartikeyan transferred himself as #Maaveeran
The movie is having a fantastic 2nd weekend at the Box office.. pic.twitter.com/8iYvMBd0Sm
— Ramesh Bala (@rameshlaus) July 22, 2023
இந்நிலையில், இரண்டாவது வாரத்திலும் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்து வருகிறது சிவகார்த்திகேயனின் மாவீரன். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.








