ஐபிஎல் தொடரின் 10-வது லீக் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் ஆடிய ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 121ரன்கள் எடுத்தது.
16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லக்னோ, தனது முதல் ஆட்டத்தில் டெல்லியை பந்தாடிய லக்னோ அணி, 2-வது ஆட்டத்தில் சென்னையிடம் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அன்மோல்ப்ரீத் சிங் 31 ரன்கள், ராகுல் த்ரிபாதி 34 ரன்கள் மற்றும் கேப்டன் மார்க்ரம் முதல் பந்தில் டக்அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 3 ரன்னிலும் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி தடுமாறியது.
அதன் பின் சுந்தர் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அப்துல் சமாத் 21 ரன்கள் குவித்தார். இதன் மூலம் முடிவில் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்துள்ளது. லக்னோ அணியில், க்ருனால் பாண்டியா 3 விக்கெட்களும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அதன்படி 122 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.