ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிய நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது . இது தமிழ்நாடு -கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதையாக உள்ளது.
திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது. சுதாரித்துக் கொண்டு ஓட்டுநர் லாரியில் இருந்த குதித்து உயிர் தப்பினார்.
இதனையடுத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டது.







