முக்கியச் செய்திகள்தமிழகம்

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது ஏன்? பாமக விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பாமக விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்குதான் இழப்பு என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, தேர்தல் நடைபெற உள்ள 7 மாவட்டங்களில் பாமக பலமாக உள்ளது. எனவே பாமகவில் அதிகமானோருக்கு வாய்ப்பு தருவதற்காக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

அதிமுகவுடன் முரண்பாடு ஏற்பட்டதை போன்ற தோற்றம் உருவானதில் உண்மையில்லை என்றும், அதிமுகவுடன் நட்போடுதான் இருக்கிறோம். அதிமுக அரசு மீது நேற்று எந்த விமர்சன கருத்தையும் கூறவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்.

இதுவரை இருந்த கூட்டணியில் தொடர்வதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்ற அவர், “சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மட்டுமே பாமக-அதிமுக ஒப்பந்தம் போடப்பட்டது” என்றும் விளக்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா? – பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

Web Editor

அவங்களே பதில உருவாக்கும்போது ஏன் பேட்டி கொடுக்கணும்?-விஜய்

Vel Prasanth

‘மாமன்னன்’ பட பிரமாண்ட இசை வெளியீட்டு விழா; சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் நடிகர் கமல்ஹாசன்!…

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading