ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதில் நேற்றுவரை 64 ஆயிரத்து 299 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. வரும் 25-ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம் எனவும் அன்றைய நாளே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.