9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதி வரை நடைபெற்றது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் போட்டியிடுபவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கபட உள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.