2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நான் உங்களின் பாச மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு, பாசம், மரியாதை, நம்பிக்கை அனைத்துக்கும் நான்ந நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்றிருந்தாலும் என்னைப்
பொருத்தவரை நான் உங்களில் ஒருவன் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்டத்
தொண்டன் தான். 2026-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி
அமைப்போம். அதற்காக ஓயாமல் உழைக்கும் மற்றொரு பாட்டாளி தான் நானும்.
ராமதாஸ் தொடங்கி பாட்டாளி மக்கள் கட்சியின் கடைநிலைத்
தொண்டன் வரை என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணிப் பார்க்கும் போது
எனது பொறுப்புணர்வு கூடுகிறது. எனது கடமைகளும், பணிகளும் அதிகரிக்கின்றன.
தமிழ்நாட்டு மக்களைக் காக்க மதுவிலக்கு, இளைஞர்களைக் காக்க போதை ஒழிப்பு,
பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் நலனுக்காக நீர் மேலாண்மை, வேளாண் வளர்ச்சி, நாட்டைக் காக்க சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் தணிப்பு, மக்களின் நலனுக்காக கல்வி, சுகாதாரம், விவசாயம், அரசு நிர்வாக சீரமைப்பு, தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என நாம் ஆற்ற
வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.
பா.ம.க. 2.0 என்ற புதிய செயல் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி நடக்கும். அதற்காக எல்லோருடனும் இணைந்து ஒற்றுமையாக அர்ப்பணிப்போடு செயலாற்றுவோம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக எனக்கும், நிர்வாகிகளாக உங்களுக்கும்
ராமதாஸ் அளித்திருக்கும் பணி ஒன்றுதான்.
அந்த பணியை செய்து
முடிப்பதற்காக இன்று முதல் நாம் அனைவரும் கைகோர்த்து உழைப்போம் வாருங்கள் என அன்புமணிி அழைப்பு விடுத்தார்.
பாட்டாளி சொந்தங்கள் அனைவரையும் அழைக்கிறேன். கட்சியில் நீங்கள் வேறு
நான் வேறு அல்ல. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உழைப்போம். நீங்கள் அனைவரும் ராமதாஸ் போல மக்களைத் தேடி கிராமங்களுக்குச் செல்லுங்கள். ஒன்றியம் தோறும் இருசக்கர ஊர்திப் பேரணிகளை நடத்துங்கள். நீங்கள் அழைக்கும் ஒன்றியத்திற்கு ராமதாசும்
வருவார், நானும் வரக் காத்திருக்கிறேன்.
நமது கொள்கைகளையும், இதுவரை பாட்டாளி மக்கள் கட்சி படைத்த சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறுவோம். தமிழ்நாட்டு
மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெறுவோம். 2026ஆம் ஆண்டில் மக்கள் நம்மை ஆட்சியில் அமர்த்துவர். நாற்பத்து மூன்று ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இன்று வரை சமூக நீதிக்காக போராடும் ராமதாஸ் லட்சியங்களை
நிறைவேற்ற எழுச்சியுடன் பணியாற்றுவோம்.
இப்போது எனது எண்ணம் முழுவதும் நிறைந்திருப்பது நீங்களும், தமிழ்நாட்டு
மக்களின் முன்னேற்றமும் தான். உங்களுடன் நான் இருக்கிறேன் உங்களை நான் வழி
நடத்துகிறேன். நேர்மையான அரசியலை நடத்துவோம்.
நான் எந்த முடிவு எடுத்தாலும் அது நமது கட்சி மற்றும் நமது தமிழகத்தின் நலன்
சார்ந்தே இருக்கும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அப்பொழுதுதான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.