மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில், கணிதப் பாடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில், 3-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணித பாடத்தில் 1,000 எண்கள் வரை எழுதவும், படிக்கவும் தெரிந்துள்ளது என்றும் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் கணித திறன் அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. அத்துடன் ஆங்கிலத்தை புரிந்துகொள்வதிலும், எழுதுவதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய சராசரிக்கு இணையாக உள்ளனர் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூக அறிவியல் பாடத்தில் வரலாற்று நிகழ்வுகள் குறித்த அறிவு திறன் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் ஆனால், 10-ம் வகுப்பு பயிலும் 85% மாணவர்களின் அடிப்படை அறிவியல் அறிவு தேசிய சராசரியை விட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் 5-ம் வகுப்பு பயிலும் 33% மாணவர்கள் மட்டுமே மொழிப்பாடத்தை எழுதவும், படிக்கவும் தெரிந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியை விட குறைந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில் தகவல் வெளியாகியுள்ளது.