காஷ்மீரில் திடீர் நிலச்சரிவு; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. டி2 மரோக் ரம்பனில் நிலச்சரிவு…

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. டி2 மரோக் ரம்பனில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலையில் பெரும் மண் குவியல் கிடப்பதால், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை  தடைபட்டுள்ளது. NH-44 இல் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் உறுதிப்படுத்தல் இல்லாமல் மக்கள் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய 62 நாள் வருடாந்திர யாத்திரையில், இதுவரை 4.23 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். இந்த பயணம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.