கருணைத் தொகை வாங்காதவர்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக அரசு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தொகை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விவசாயத்தை முடித்து அறுவடை செய்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், நிலத்தில் புதிதாக பயிரிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்த நீதிபதி, தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தார்.







