லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்: ராஜஸ்தான் விரைந்த போலீசார்!

சென்னையில் லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் நகையை மதிப்பிடும் போது, 5 கிலோ தங்க…

சென்னையில் லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் நகையை மதிப்பிடும் போது, 5 கிலோ தங்க நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தனர். இதனையடுத்து லலிதா ஜூவல்லரி அலுவலகத்திற்கு, நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 7 ஆண்டுகளாக ஸ்டாக் பிரிவில் பணியாற்றி வந்த, ராஜஸ்தானை சேர்ந்த பிரவிண் குமார் சிங் என்பவர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான பிரவீன் குமார் சிங்கை பிடிக்க போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply