33.9 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எல்.முருகன் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கடிதம் எழுதியுள்ளார்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், தமிழ்நாடு மீனவர்களை, அவர்களது படகுகளுடன் பத்திரமாக விடுவிக்கபட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading