முக்கியச் செய்திகள்இந்தியா

குவைத் தீவிபத்து – இறந்தவர்களின் உடல் ராணுவ விமானமூலம் நாளை டெல்லி கொண்டுவரப்படுகிறது!

குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல் நாளை குவைத் ராணுவ விமான மூலம்  இந்தியா கொண்டுவரப்படுகிறது. 

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல் நாளை காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர அந்நாட்டின் ராணுவ விமானத்தை வழங்கியுள்ளார் குவைத் மன்னர் ஷேக் அல் சபா. மேலும் இந்த தீவிபத்தில் இறந்த இந்தியர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரபு நாடுகள் அல்லாத ஒரு நாட்டிற்கு ராணுவ விமானம் மற்றும் நிதியுதவி அளிப்பது இதுவே முதல்முறை ஆகும். அடையாளம் காணப்பட்ட 7 தமிழர்களின் உடல்களும் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. சிறப்பு விமானம் மூலம்  வரும் உடல்கள் நாளை காலை டெல்லி வந்தடைந்து, அதன்பிறகு தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இந்திய சர்வதேச திரைப்பட விழா: 5 தமிழ் படங்கள் தேர்வு!…

Web Editor

மகாராஷ்டிரா; லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் பலி

Jayasheeba

தமிழ்நாட்டில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு!

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading