கண்டமங்கலம் அருகே அத்திக்குளம் பகுதியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்போது கண்டெடுக்கப்பட்ட உறை கிணறுகள் உள்ள பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள அத்திக்குளம் பகுதியில் மகாத்மா ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரு பணி கிராம பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அத்திக்குளம் பகுதியில் கிராம பணியாளர்கள் குளத்தை தூர்வாரு
போழுது சுடுமண்னால் செய்யப்பட்ட 10 க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் இருப்பது
கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த உறை கிணறுகள் ஆறு, குளம் உள்ள பகுதிகளில் நீரை
சேமித்து வைத்து அவை தெளிந்த பின் அருந்துவதற்கு சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டு
இருக்கலாம் என கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் பத்தடிக்கு ஒன்று அருகருகில் உள்ளதால் மன்னர் காலத்தில் குதிரைகளுக்கு நீர் அருந்தவும் உறை கிணறுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றன.
இது குறித்து வாதானூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் கூறியதாவது:
தொல்லியல் துறை அதிகாரிகள் இந்த பகுதியில் அகழாய்வு செய்து எந்த நூற்றாண்டுகளில் இந்த உறை கிணறுகள் பயன்படுத்தப்பட்டு வந்தது என தெரிவிக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
ஸ்ரீ.மரகதம்