சினிமா பட பாணியில் சொந்த சித்தப்பாவையே காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன். கடந்த மே 1 ஆம் தேதி இவரை செல்போனில் தொடர்பு கொண்ட ரிஸ்வானா என்பவர், ரியாசுதீனுக்கு சொந்தமான நிலத்தை பார்வையிட விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும், ரியாசுதீனை தனது சொகுசு காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறிது தூரம் சென்றதும் காரில் ஏறிய சில மர்மநபர்கள் ரியாசுதீனைத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டனர். மேலும் ரியாசுதீனின் செல்போனிலிருந்து 2 லட்ச ரூபாயையும் தங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளனர். பின் அவர்கள் காருடன் தப்பியோடிய நிலையில், அவர்கள் செல்போனில் கூறியபடி சில நாட்கள் கழித்து சாலையோரம் இருந்த இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில் மேலும் 2 லட்ச ரூபாய் பணத்தை வைத்துள்ளார் ரியாசுதீன்.
அந்த வண்டி தனது அண்னன் மகன் நஸ்ருதீனுடையது என்பதை அறிந்த ரியாசுதீன் போலீசில் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட போலீசார், அண்ணன் மகன் நஸ்ருதீன் உட்பட அவரது கூட்டாளிகள் 7 பேரை கைது செய்தனர். நஸ்ருதீனுக்கும் ரியாசுதீனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.