புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடுகப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல சென்றதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரத்திலிருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலமாக புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை விராலிமலை இலுப்பூர் அன்னவாசல் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், விராலிமலை இனாம்குளத்தூர் சாலை வடுகப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் அருவி போல ஆறடி உயரத்தில் எழும்பி சாலையில் சென்று வீணானது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
—-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.