கர்நாடக மாநிலத்தில் குடகு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கர்நாடகா கபினி அணையிலிருந்து 18 ஆயிரம் கன அடி நீரானது காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,476 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் 20 ஆயிரத்து 426 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு செல்லும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.







