தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல என திமுக எம்.பி கனிமொழிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார்.
புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்
பள்ளியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சுதந்திர போராட்ட வீரர் பிரசா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவ தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “முதலமைச்சர் ரங்கசாமிக்கும் எனக்கும் எந்த விரிசலும் இல்லை. பாசப்பினைப்பு தான் உள்ளது. தமிழக
ஆளுநர் காலாவதியானவர் என கருத்து சொல்வதை திமுக எம்.பி கனிமொழி தவிர்க்க
வேண்டும். மரியாதை கொடுக்க கூடாது என்கிற எண்ணம் பல பேருக்கு உண்டு. கருத்து கூறலாம். ஆனால் மிக மோசமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல.
நாட்டில் பிரிவினை பேசுவதாக கூறிய இராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று ஒரு
இயக்கைத்தை சேர்ந்தவர்கள் மிரட்டி துன்புறுத்தி உள்ளனர். இது தேசப்பற்றை குலைக்கும் செயல். ஆளுநராக இருந்தால் கூட, நான் தேசபற்று உடையவர் என்பதால் இந்த கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக கோப்பு வந்தால் ஒப்புதல் அளிப்பேன்” என்றார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பதற்கான அனைத்து கோப்புகளும் தயராக உள்ளது என்றும், புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விரைவில் தடை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.