”எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு காமராஜர் ” – கமல்ஹாசன் புகழாரம்

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரின்  காமராஜரின் 121ஆவது பிறந்த தினம்…

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார். 
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரின்  காமராஜரின் 121ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  அவரது பிறந்த நாள் ” கல்வி வளர்ச்சி தினம் ‘ ஆகவும்  இன்று கொண்டாடப்படுகிறது . காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி  தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர்  வாழ்த்து தெரிவித்து வருகின்றர்.
நடிகரும்,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன்  எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு என தெரிவித்துள்ளார்.

படிப்பறிவு இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய் திகழ்ந்த கதையை நாடு மறக்காது என்றும், நாமும் மறவோம் என்றும்  கூறியுள்ளார். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை  வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1680057345983008769?s=46

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.