28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள்

பள்ளிக் கல்விக்கு காமராஜர், உயர்கல்விக்கு கருணாநிதி – மு.க.ஸ்டாலின்

“பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்றால், உயர் கல்விக்கு கருணாநிதி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மாமல்லபுரம் அருகே சாய் பல்கலைக்கழக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பேசுகையில், சாய் பல்கலைக்கழக முதல் கட்டிடத்தை திறந்து வைத்து, பல்கலைக்கழகத் துணை கட்டிடத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் அதாவது உயர் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இப்பொழுது தனியார் பல்கலைக்கழகமாக சாய் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான உயர் கல்விக்கு இன்னொரு அடிக்கல்லை நாட்டி இருக்கிறேன் என்கிற மனநிறைவு ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த அரசு கல்லூரிகளில் மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் நமது நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார்கள். இன்று தேசிய உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 23.1 விழுக்காட்டை விட அதிகமாக அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர் கல்வியைப் பெற்று இருக்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை முழுமையாக கலைஞர் அவர்களுக்கே சேரும்.

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்தது மட்டும் இல்லாமல், அதற்காக உச்சநீதிமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் கலைஞர். அதனால்தான் நேற்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது குறிப்பிட்டு சொன்னேன். பள்ளி கல்விக்குத் தந்தை பெருந்தலைவர் காமராசர் என்று சொன்னால், கல்லூரி கல்விக்கு முதல்வர் கலைஞர் என்று குறிப்பிட்டேன். அந்த வகையில் உயர் கல்விக்கு இந்த காலம் பொற்காலமாக இருக்கும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram