ஒன்பது ஆண்டு பொற்கால ஆட்சி தந்த காமராஜரின் ஆட்சியில், வேளாண் துறைக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை இந்த சிறப்பு செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதுடன், நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கீழ் பவானி, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி, சாத்தனூர், பரம்பிக்குளம், நொய்யாறு, ஆரணியாறு, கிருஷ்ணகிரி ஆழியாறு, வீடூர் அணைகள் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.
பெரியாறு அணையிலிருந்து பிரிக்கப்படும் கூடுதல் நீரை பாதுகாப்பாக இணைத்து வைகை நதியின் குறுக்கே, காமராஜர் ஆட்சியில் அணை கட்டப்பட்டது.
சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.
காமராஜரால் அமைக்கப்பட்டு, 50 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் அணைகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளின் குடிநீர், விவசாயத் தேவை இன்றளவும் பூர்த்தி செய்கிறது.