எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது : கமல்ஹாசன்

எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலை வியாபாரமாக பார்க்காமல் கடமையாக பார்ப்பவர்கள்…

எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலை வியாபாரமாக பார்க்காமல் கடமையாக பார்ப்பவர்கள் மட்டுமே இக் கட்சியில் தங்கி செழிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மும்முனை போட்டியிருந்த கோவை தெற்கு தொகுதியில் 33 சதவிகிதம் வாக்காளர் தம்மை மதித்து வாக்களித்துள்ளார்கள் என்றும், பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம் 33 விழுக்காடு பெற்றுள்ளதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் இன்னும் இரண்டாயிரம் வாக்குகள் வாங்கியிருந்தால் சரித்திரம் சற்றே மாறியிருக்கும் எனவும், சாதனை என்பது சொல் அல்ல செயல் எனவும் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவர்கள் என காத்திருப்பவன் நானல்ல என்றும், தவறிழைத்தவர்களை திருத்தும் கடமையும், உரிமையும் உள்ள தலைவன் நான் என்றும் கூறியுள்ள கமல்ஹாசன், நம்பிக்கை கொள்ளும் நம்மவர் கூட்டம் இருக்கிற வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.