சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை அதிகாலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அழகர்மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பக்தர்கள் புடைசூழ புறப்பட்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 4
ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்
கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்டவை மிக முக்கிய நிகழ்வுகளாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இதன் படை சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான சனிக்கிழமை தங்க சப்பரத்தில் பிட்சாடன கோலத்தில் பிச்சாண்டி சுவாமி வீதி உலா வந்தார்.
இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவில் 8 ஆம் நிகழ்வில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார். மே 2ம் தேதி பிரம்மாண்டமான மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரம்மாண்டமான அறுசுவை உணவு மதுரை சேதுபதி பள்ளியில் தயாரிக்கப்பட்டது. மேலும், நியூஸ் 7 தமிழ் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மே 3ம்தேதி காலை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. தேர் முட்டில் இருந்து மீனாட்சி மற்றும் சுந்தரேஷ்வர் ஆகியோர் தேரில் மாசி வீதிகளை வலம் வந்தனர். தேரை பின் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்தனர். மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை அதிகாலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அழகர்மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பக்தர்கள் புடைசூழ புறப்பட்டார். அப்போது, பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி முன்பு உத்தரவு கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதையடுத்து மதுரை செல்லும் வழிநெடுகிலும் உள்ள சுமார் 470 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். மதுரை வரும் வழியில் மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை அளிக்கும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து நாளை அதிகாலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளவுள்ளார். நாளை மறுநாள் காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், அன்று மாலை தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
மே 7ம் தேதி பூப்பல்லக்கு விழா நடக்கிறது. மே 8ஆம் தேதி தனது இருப்பிடமாக அழகர்மலைக்கு புறப்படும் கள்ளழகர், 9ஆம் தேதி காலை அழகர்மலை திரும்புகின்றார்.
மதுரை சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும் நியூஸ்7 தமிழ் பிரத்யேகமாக நேரலை செய்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்ட நிகழ்வுகளை நேரலையில் காண நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் பக்கத்தை பின் தொடருங்கள்..
சித்திரை திருவிழா கள்ளழகர் எதிர்சேவை சிறப்பு நேரலை நிகழ்வுகளை காண…
https://www.youtube.com/@News7TamilBakthi/streams