முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்

ஜோ பைடன் vs டொனால்ட் டிரம்ப்! – தொடங்கியது நேரடி விவாதம் | அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் களம்!

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில்  தேர்தலுக்கு முன்னதாக பைடன் மற்றும் டிரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். 
விவாதத்தில் கருக்கலைப்பு விவகாரம் தொடர்பான வாதங்கள் சூடுபிடித்தன என்றும், ஆப்கானிலிருந்து அமெரிக்க படை வெளியேறியதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார் என்றும் தெரிகிறது. மேலும் பணவீக்கம் குறித்து அதிபர் பைடனை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த விவாதங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அதிபர் பைடன் அடுத்து பேசுவார் என்றும் அவர் டிரம்ப் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காரசாரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரின் பேச்சில் யார் பேச்சு அமெரிக்க மக்களை கவர்கிறதோ அவர்கள் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது நேரடி விவாதம் தொடங்கிய நிலையில் அடுத்த கட்டமாக தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்றும் அமெரிக்கா மக்கள் தங்கள் அடுத்த அதிபராக யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்

EZHILARASAN D

திமுக என்றாலே மன்னர் ஆட்சிதான்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Halley Karthik

மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜி-தமிழிசை செளந்தரராஜன்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading