பேரறிஞர் அண்ணா குறித்த பேச்சிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர். அண்ணா வழியில் கழகம் வெற்றி நடைபோடுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான். அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளது, அதனால் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி பார்த்தார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள்.
அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அவரது பேச்சிற்கு அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும். முத்துராமலிங்க தேவரும், அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள். முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நல்ல மதிப்பு கொண்டு உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை, அமைச்சர் 14 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களை பார்த்தார் என்று செய்தி வருகிறது. எது தேவையோ அதை செய்ய வேண்டும். மின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோள பொறியாக தான் உள்ளது.
கல்விக் கடன் ரத்து என்று சொன்னார்கள் செய்யவில்லை, நகை கடன் முழு தள்ளுபடி என்று சொல்லி 10% தான் செய்தார்கள். தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை அல்ல, ஒரு பாராங்கல்லை சோற்றில் மறைக்கக் கூடிய வல்லமை படைத்த கட்சி திமுக என ஜெயக்குமார் கூறினார்.