தமிழ்நாடு அரசு சார்பில் கடலில் ஆளுயர பேனா வைப்பதில் தனக்கு மிக பெரிய மகிழ்ச்சி என இயக்குனர் பார்த்திபன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘கலைஞர் திரை அரங்கம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்
சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் பார்த்திபன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பாண்டியராஜன், நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ் பாஸ்கர்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பார்த்திபன், அமைச்சர் சேகர்பாபு பிரமாதமான கேப்டன் ஆப் திமுக என கூறினார். கருணாநிதியை தான் நினைத்து பார்ப்பதாகவும், அவர் இருந்து இருந்தால் இரவின் நிழல் படத்தினை பார்க்க கையினை கூட்டி கொண்டு பார்க்க சென்று இருப்பேன் அவரே அதற்கு விருதுகளையும் கொடுத்து இருப்பார் என்றும் கூறினார்.
ஒரு முறை பாரதிராஜா கருணாநிதி நிகழ்ச்சியில் கீழ் இருந்த என்னை பார்த்து ஒரே நிகழ்ச்சியில் பேரனையும் , தாத்தாவையும் பார்க்கின்றேன் என சொல்லி
இருந்தார். உடனே கருணாநிதி பேசும் போது பாரதிராஜாவை பார்த்து பார்த்திபனை பார்த்து பேரன் என சொல்லும் போது நீயுமே தாத்தாவாக தான் ஆகிறாய் என சொல்லி பதிலடி
கொடுத்தார்.
கருணாநிதி கைது தன்னை உருகுலைய வைத்தது. அப்போது அவருக்கு ஆதரவாக பலரும் பேட்டி கொடுக்க தயங்கிய நேரத்தில், தான் பேட்டி கொடுத்தேன். பிற்காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூட சொல்லியுளார், நாம் எவ்வளவு செய்கின்றோம் ஆனால் பார்த்திபனூக்கு கருணாநிதி மீது தான் பற்று உள்ளதே என கூறியதை பார்த்திபன் நினைவு கூர்ந்தார்.
அவுஸ் புல் படத்தில் கதாப்பாத்திரம் முன்னாள் அமைச்சர் ஆற்காடு அவரை பற்றி தானே எடுத்தாய் என கருணாநிதி சொன்னார். எனவே இதற்கு வரி விலக்கு கிடைக்காது என
நினைத்தேன் மறுநாள் என்னை அழைத்து அவுஸ் புல் படத்திற்க்கு வரி விலக்கு கோப்பில் கையெழுத்து போட்டு வைத்து இருந்தார் கருணாநிதி. மறக்க முடியாத அவருக்கு கடற்கரையில், ஆளுயர பேனா வைப்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என பார்த்திபன் தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்