யூரோ கால்பந்து: அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய இத்தாலி அணி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 24 நாடுகள் விளையாடிவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்று தொடங்கியுள்ளது.…

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

24 நாடுகள் விளையாடிவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்று தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில், ஸ்பெயின் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், முதல் 8வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் ஜோர்டி ஆல்பா அடித்த பந்து, ஸ்விட்சர்லாந்து வீரர் டெனிஸ் சகாரியாவின் காலில் பட்டு கோலாக மாறியது.

இதன்மூலம் முதல்பாதியில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் பாதியில் சுவிட்சர்லாந்து வீரர் ஹெர்டன் ஷக்கிரி கோல் அடித்ததால், போட்டி சமனில் முடிந்தது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி கிக் முறை நடைபெற்றது. இதில், 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற ஸ்பெயின் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெல்ஜியம் அணியும், இத்தாலி அணியும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இத்தாலி வீரர்கள் நிகோல்லோ பாரெல்லா, லோரன்சோ இன்சைன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பெல்ஜியம் அணி தரப்பில் ரோம்லு லுகாகு ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், 2 க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.