அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகும் மழை.! எந்த மாவட்டங்களில் தெரியுமா?

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  கடந்த இரண்டு வாரங்களாகவே தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய…

Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களாகவே தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் ஊரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது.

இந்தநிலையில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு திசையின் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மட்டும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன்படி, தமிழகத்தின் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.