காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா கிராசிங் பாலஸ்தீனியர்களுக்காக இன்று காலை 9 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
காசா எல்லையில் ஒருபுறம் லட்சக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் குவிந்துள்ள நிலையில், பாலஸ்தீனியர்களை காஸாவை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேல் தரப்பில் இருந்து தரைவழி தாக்குதலுக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டதால், எந்த நேரத்திலும் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம். அதே சமயம் காஸாவை ஆக்கிரமிப்பது பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, எகிப்தும் தனது எல்லையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், காசா, எகிப்து இடையேயான எல்லை மீண்டும் திறக்கப்பட்டது. காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா கிராசிங் பாலஸ்தீனியர்களுக்காக இன்று காலை 9 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.