என்.எல்.சி விரிவாக்க பணிகளுக்கு விவசாய நிலங்கள் கையக்கப்படுத்தும் பணி தொடர்பாக விவாதிக்க கோரி அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக 30-க்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்கள் மூலம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணி நடைபெற்றது.
அப்போது நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்னை குறித்து விவாதிக்க கோரி மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார்.என்.எல்.சி நிர்வாகம் விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது . இது பொதுமக்களுக்கு முற்றிலும் எதிரானது என்றும், இந்த விரிவாக்க பணியால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.