நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் இருளர் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட புதிய வீட்டின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிவு ஏற்பட்டு வருவதாகவும், இது நாள் வரையில் மின் இணைப்பு பொருத்தப்படவில்லை எனவும் இருளர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வெலக்கல்நத்தம் அடுத்த செட்டேரி டேம் பகுதியில் இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மூன்று தலைமுறை காலமாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து நமது நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக அப்பகுதியில் வசித்த மக்களுக்கு அரசு சார்பில் 9 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
அரசு சார்பில் ஒரு வீட்டிற்கு ரூ3லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு மின் வசதி வழங்கப்படாமல் சூரிய ஒளி மின் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அரசு சார்பில் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை மழைக் காலங்களில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீட்டிற்கு உள்ளே வருவதாக தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இருளர் இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்டு வீடுகளில் மக்கள் குடி பெயர எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
-ம. ஶ்ரீ மரகதம்