29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட 1800 சிறப்பு விருந்தினர்ளுக்கு அழைப்பு.!

செங்கோட்டையில் நாட்டின் 76-வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லி உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், அந்தந்த மாநிலங்களில், அம்மாநில முதலமைச்சர்கள் தேசிய கோடி ஏற்றி அம்மாநில மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், டெல்லி செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து PM-KISAN திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை மத்திய அரசு அழைத்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தனையோட்டி ‘அதிர்வுமிக்க கிராமங்கள்’, ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள், மீனவர்கள், மத்திய விஸ்டா திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், காதி துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவிற்கு பிறகு, மருத்துவமனை சேவைகளை நடத்துவதில் செவிலியர்களின் முக்கியத்துவம் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இந்த நிலையில், பிரதமரின் உரையை கேட்பதற்காக சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட கிட்டத்தட்ட 1,800 பேரில் ஐம்பது செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் அடங்குவர். இதில் டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மூத்த செவிலிய அதிகாரி நிதி பேலா, தனது குடும்பத்தினருடன் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய நர்ஸ் நிதி பேலா நர்சிங் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைப்பது நல்லது என்று கூறினார்.

ஃபரிதாபாத்தில் உள்ள பாட்ஷா கான் சிவில் மருத்துவமனையின் இரத்த வங்கியில் நர்சிங் அதிகாரியாக பணிபுரியும் சவிதா ராணியும் இந்த நிகழ்ச்சியில் அழைக்கப்பட்டுள்ளார். கோவிட்-19 நெருக்கடியின் போது அவர் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால் செவிலியர் தினத்தில் கௌரவிக்கப்பட்டார்.

இதேபோல், இந்து ராவ் மருத்துவமனையின் உதவி செவிலியர் கண்காணிப்பாளர் வீர்மதியும் ஆகஸ்ட் 15 விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் கோவிட்-19 நிர்வாகத்தின் பொறுப்பாளராக இருந்தார். 56 வயதான வீர்மதி கூறுகையில், ‘தொற்றுநோய் ஒரு கடினமான கட்டம். எங்களுடைய சொந்த முயற்சியாலும், சில சமயங்களில் எங்கள் குடும்பத்தின் தேவைகளை தியாகம் செய்தாலும் அதை எளிதாக்கினோம். ஆனால், இந்த மதிப்புமிக்க நிகழ்வில் எங்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதன் மூலம் எங்களின் முயற்சிகளை அரசு அங்கீகரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் சுதந்திர தினவிழாவிற்கு இந்தியா முழுவதிலுமிருந்து அழைக்கப்பட்ட மற்றவர்களில் அதிர்வுறும் கிராமங்களைச் சேர்ந்த சபாநாயகர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்ளும் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading