குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்டா சீதல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீஸ்டா சீதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமின் வழக்கு உத்தரவிட்டது.
2002ம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களைக் கைது செய்ய போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி முன்னாள் காவல்துறை டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இடைக்கால ஜாமின் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை.
இதனையடுத்து தீஸ்டா சீதல்வாட் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீது பதிலளிக்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது.
இன்று உச்சநீதிமன்றம் தீஸ்தாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.








