முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்தவர். இவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 1948ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த போது, அவரது பாதுகாவலர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரது 38வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் டெல்லியிலுள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியும் தெலுங்கானாவில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவரது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் எனது அஞ்சலி செலுத்திகிறேன். விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவ பலம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்புகள் இரண்டையும் என் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.