சாம்பியன்ஸ் டிராபி 2025 | ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் விளையாடவுள்ளன.

இத்தொடரில் விளையாடவிருக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பை மற்ற அணிகள் ஏற்கனவே தெரிவித்திருக்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்) , சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பும்ராவின் உடல்நிலை கருதி அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.