மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் இன்று களமிறங்குகிறது.
பிரிட்ஜ்டவுன், மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்று (ஜூலை29) இரவு 7 மணிக்கு நடக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட்டுகளுக்கு 88 ரன்களுடன், நல்ல நிலையில் இருந்த மேற்கு இந்திய தீவுகள் அணி, எஞ்சிய 26 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னில் சுருண்டது.
மேற்கிந்தியத் தீவுகள் 23 ஓவா்களிலேயே 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சோ்த்து இந்தியா இலக்கை அடைந்தது.
தொடக்க ஆட்டத்தைப் போன்றே இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
இன்றைய போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் விவரம் பின்வருமாறு;
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப், உம்ரான் மாலிக், முகேஷ்குமார், சஹால், உனத்கட், சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், ருதுராஜ் கெய்க்வாட்
மேற்கிந்திய தீவுகள்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஆலிக் அதானேஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், ரோமன் பவெல் , கேசி கர்டி, ரொமாரியா ஷெப்பர்டு, டொமினிக் டிராக்ஸ், யானிக் கரியா, குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீலஸ், அல்ஜாரி ஜோசப் அல்லது ஒஷானே தாமஸ்









