இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இரண்டு மூன்று நாட்களாக தொற்று பாதிப்பு நன்றாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 10,853 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 12,432 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவிகிதம் 98.24% ஆக இருக்கிறது. இதுவரை 3,37,49,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது தொற்றுக்கு 1,44,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 526 பேர் தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 1,08,21,66,365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது என்ரு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.