இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தம்! நாளை மீண்டும் விட்ட இடத்திலிருந்து போட்டி தொடங்கும்!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தடைபட்ட ஓவரில் இருந்து தொடங்கி நாளை மீண்டும் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை 2023…

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தடைபட்ட ஓவரில் இருந்து தொடங்கி நாளை மீண்டும் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டிருக்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்தது.

இறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இதேபோல் சுப்மான் கில் 58 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 10 பவுண்டரிகள் விளாசினார் அவர்.

மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் இருக்கும் நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. 24.1 ஓவர் ஆடியிருக்கும் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் 90 விழுக்காடு மழைக்கு வாயப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் போட்டி தடைபடும் என தெரிந்த காரணத்தினால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இப்போட்டிக்கு ரிசர்வ் டே அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் ரத்தான, இந்தியா, பாக் ஆட்டம் நாளை மீண்டும் 24.1 ஓவரிலிருந்து தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.