Skip to content
April 06, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » increase in violence due to social media
முக்கியச் செய்திகள்

சமூக வலைதளங்களால் வன்முறை சம்பவம் அதிகரிப்பு?

வன்முறை சம்பவங்களுக்கு போலி சமூக வலைதள பக்கங்கள் பயன்படுத்துவது தான் காரணமா என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் எதற்காக தொடங்கப்படுகிறது,  இதனால் யாருக்கு பாதிப்பு என்பது…

Author Avatar

G SaravanaKumar

July 22, 20222:09 pm fake accountSocial MediaViolence

வன்முறை சம்பவங்களுக்கு போலி சமூக வலைதள பக்கங்கள் பயன்படுத்துவது தான் காரணமா என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் எதற்காக தொடங்கப்படுகிறது,  இதனால் யாருக்கு பாதிப்பு என்பது குறித்த தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ அல்லது பயன்பாடற்று புதர்மண்டிக் கிடக்கும் இடத்திலோ குற்ற சம்பவங்கள் நடந்தால் அதனை சமூக விரோதிகளின் கூடாரம் என்று கூறுவது வழக்கம். அப்படிப்பட்ட கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகிறதோ என்ற அச்சம் பல தரப்பிலிருந்தும் வலுக்கிறது.

உலகளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துகிறார்கள். இவர்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையே அதிகம். தகவல் பரிமாற்றம், நட்புறவு, ஒன்றிணைத்தல், கருத்துகளை பதிவு செய்தல் போன்ற பயன்பாட்டிற்காக social media உருவாக்கப்பட்டாலும் அதனுடைய நோக்கம் முற்றிலும் மாறி தற்பெருமையை பறைசாற்றும் தளமாகவே மாறிவருகிறது.

நவீன உலகத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்திலும் கணக்குகள் வைத்திருந்தாலும் அவர்களை பின்தொடர்வோரின் எண்ணைக்கையை வைத்தே மதிப்பிடப்படுவதாக சொல்லப்படுகிறது. ஃபாலோவர்ஸ்க்காக வலைதள பயன்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் அதிகம். இதற்கு பின்னணியில் ஒரு பெரிய வணிகமே மறைமுகமாக செயல்பட்டு வருவதாக சைபர் வல்லுநர்களுடைய கருத்தாக உள்ளது.

இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இருக்கும் தகவல் என்னவென்றால் ஒருவர் உருவாக்கிய போலி கணக்கில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் அதிக பாலோவர்ஸ்கள் உருவாகுவதாக சைபர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணிக்கை அதிகரித்தவுடன் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டு அதே கணக்கை பெயர் மாற்றம் செய்து தேவைப்படும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து விடுவதாகவும் அவர்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.

பாலோவர்ஸ்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கான ப்ரமோசன்ஸ் மற்றும் வருவாய் ஈட்டும் வகையிலான விளம்பரங்கள் குவிவதாக சைபர் வல்லுநர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். வதந்தியை பரப்பவோ, முக்கிய பிரமுகர்களை இழிவாக பேசவோ, போலி சமூக வலைதள கணக்குகள் கையாளப்படுவதாக குற்றச்சாட்டுகளும் இருக்கிறது.

இதே போலத்தான் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு காரணமாக இருப்பது போலி சமூக வலைதள பக்கங்கள் என்ற கருத்தையும் சைபர் க்ரைம் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். போலி சமூக வலைதள பக்கங்களை கண்டறிவது என்பது சைபர் க்ரைம் காவல் துறையினரின் பணி என்றாலும் கூட அதனை கண்டறிவது பொதுமக்களுக்கு சுலபமான ஒரு விஷயம் தான் என்கிறார் சைபர் க்ரைம் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

போலி சமூக வலைதள பக்கங்களை கையாண்ட 35 யூடியூப் சேனல்கள், 2 டுவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் பக்கங்கள், ஒரு பேஸ்புக் பக்கத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் முடக்கி நடவடிக்கை எடுத்தது. சைபர் க்ரைம் காவல் துறையினரும் அரசும் நடவடிக்கை எடுத்தாலும் பயணாளர்களுக்கு சமூக பொறுப்பு அவசியமானது என்ற கருத்தை சமூக செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

#IPL2026 | கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

By Web Editor April 6, 2026

“திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!

By Web Editor April 6, 2026

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

By Web Editor April 6, 2026

#IPL2026 | சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

By Web Editor April 6, 2026
#ट्रेंडिंग हैशटैग:fake accountSocial MediaViolence

Post navigation

Previous Previous post: வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?
Next Next post: ‘ஜாதி பாகுபாடு பார்க்காமல் பணியாற்ற வேண்டும்’ – அமைச்சர்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading