32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவமனைகளில் படுக்கை வசதி அதிகரிப்பு- அமைச்சர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 1,74,831 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் 27,563 ஆக்ஸிஜன் படுக்கைகள் இருந்ததாகவும், அது கடந்த 12 மாதங்களில் 53,689 ஆக்ஸிஜன் படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், 60,496 ஆக்சிஜன் இல்லா படுக்கைகள் இருந்த நிலையில், தற்போது 1,10,569-ஆக படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 7,154 ஐசியு படுக்கைகள், தற்போது 10,571 ஐசியு படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை 79,618 படுக்கைகள் கூடுதலாக கொண்டுவரப்பட்டு, படுக்கைகளின் எண்ணிக்கை 1,74,831 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அம்மா பெயரில் உப்பு, தண்ணி, காய்கறி என எவ்வளவோ பெயர் வைத்தீர்கள். முழு உடல் பரிசோதனை என்பது எல்லா மருத்துவமனைகளிலும் இருக்கிற சாதாரண ஒரு விஷயம். அதை ஓமந்தூரார் மருத்துவமனையிலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை எனபோர்டு வைத்தீர்கள். ஏற்கனவே நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுக்கு பெயர் வைத்து போடு வைத்தீர்கள். அந்த மாதிரி அரசியலை தமிழக முதல்வர் எங்களுக்கு கற்றுத் தரவில்லை என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading