ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்: திருவாரூரில் இன்று திறந்து வைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.  மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12…

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. 
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது .  இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
தேர் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது.

கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதோடு, நூலகம் மற்றும் கலைஞர் சிலையை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் துனை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.

இதனையும் படியுங்கள் : அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும்  பீகாரிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சிக்கு வருகின்றனர்.  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூருக்கு மதியம் 3 மணியளவில் வருகை தர உள்ளனர்.  இதனையடுத்து காட்டூரில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.