முக்கியச் செய்திகள் சினிமா

சொந்தமாக பிசினஸ் செய்யும் சினிமா பிரபலங்கள் யார்? யார்?…

சொந்தமாக பிசினஸ் செய்யும் சினிமா பிரபலங்கள் குறித்த முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். 
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வங்கியில் நடக்கும் விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டி விழப்புணர்வு ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது. இதையடுத்து  ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். லைகா தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை நீரவ் ஷா மேற்கொள்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் இவர், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.  சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிசினஸிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார். இவர், ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தொடங்கிய நயன்தாரா, அதன் மூலம் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். மேலும் முழுமுழுக்க லிப் பாம்களுக்கு  பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும் பிராண்ட் அம்பாசிடராகவும் நயன்தாரா இருந்து வருகிறார்.
ஜீவா:
வித்தியாசமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பையனை போன்ற தோற்றத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஜீவா.நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட ஜீவா,   சொந்தமாக நட்சத்திர விடுதியை நடத்தி வருகிறார். ரெஸ்ட்டாரண்ட் திறப்பு விழாவிற்கு ஒரு நட்சத்திர பட்டாளத்தையே அழைத்தார்.
தமன்னா:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தமன்னா, பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது  நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சூப்பர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவருகிறார். தது பிசியான  சினிமா வாழ்க்கைக்கு நடுவில், வொயிட் அன்ட் கோல்டு என்ற தங்க நகை நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக உள்ளார் தமன்னா. சினிமாவையும், தொழிலையும் இருகண்களாக நினைத்து செய்து வருகிறார்.
காஜல் அகர்வால்:
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.  இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். குடும்பம், சினிமா என பிசியான தனது வாழ்க்கையில் காஜல் அகர்வால், மார்சலா என்ற நகை மற்றும் பேஷன் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
பிரசாந்த்:
தமிழ் சினிமாவில், விஜய் – அஜித் போன்ற நடிகர்கள் ஆரம்ப காலத்தில் தடுமாறியபோது கூட, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் பிரசாந்த். மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர், ஹிந்தியில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான ‘அந்தாதூண்’ படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இவர்  ஒரு பெரிய வணிக வளாகத்தை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையின் கட்டடம் இவருடையது.
ஆர்யா:
அப்படி 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாகி இருக்கிறார் ஆர்யா. சினிமாவில் நுழைவதற்கு முன் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி இருக்கிறார். இவரது தந்தை கால்பந்து விளையாட்டு வீரர் மற்றும் ரெஸ்டாரன்ட் ஓனராவார். நடிகர் ஆர்யா Vätternrundan Motala cycle race என சைக்கிள் ரேஸ்களில் கலந்துகொண்டு மெடல்கள் வாங்கியிருக்கிறார். நடிகை சயீஷாவை 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்யாவிற்கு 2021ம் வருடம் பெண் குழந்தை பிறந்தது. கொம்பன், மருது, விரும்பன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது இயக்கத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். இதில் ஆர்யா நாயகனாகவும், சித்தி இதானி நாயகியாகவும் நடிக்கின்றனர். குடும்பம், சினிமா என பிசியான தனது வாழ்க்கையில்
ஆர்யா, சென்னையில் உள்ள ”ஸீ ஷெல்” என்ற ரெஸட்டாரண்டை சொந்தமாக நடத்தி வருகிறார்.
சிம்ரன்:

டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ-2 , கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பரீட்சையமான முகமாக மாறியவர் நடிகை நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து 2 படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளனர்.  நிக்கி கல்ராணி, சினிமாவை தவிர்த்து சொந்தமாக ஒரு “கஃபே ஷாப்” வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘நான் கொஞ்சம் மூச்சு விடனும்’ – விடுதலை குறித்து பேரறிவாளன்

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனா

EZHILARASAN D

சென்னையில் கஞ்சா கேக் ; கடிவாளம் போட்ட காவல்துறை

Web Editor