உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கீ லாரோவ் இதனை தெரிவித்துள்ளார். தூதரக ரீதியிலான தீர்வுகளுக்கு ரஷ்யா எப்போதுமே தயாராக இருந்து வருவதாக தெரிவித்துள்ள லாவ்ரோவ், மக்களை இனப் படுகொலை செய்யும் ஒரு அரசை ஜனநாயக அரசாக அங்கீகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அடக்குமுறையை சந்தித்து வந்த உக்ரைன் மக்கள் தற்போது அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள செர்ஜி லாவ்ரோவ், இனி தங்கள் எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார். தற்போதைய சூழலில் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் மக்கள் சுதந்திரத்துடன் இருப்பதை பார்க்கவே ரஷ்யா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.